முகம் பொலிவு பெற என்ன செய்யலாம்.

முகம் பொலிவு பெற என்ன செய்யலாம்.

தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ் வாறு செய்வதால், முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும். தின மும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெறும்.

* மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம், புதுப் பொலிவடையும்.
* வீட்டிலிருக்கும் போது, பால் ஏடுகளை முகத்தில் தேய்த்து வரவும்.
* புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவி வர, உலர்ந்த தன்மை நீங்கும். முகப்பருக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
* முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி வர, முகம் மலர்ச்சியடையும்.
* முகத்திற்கு அடிக்கடி க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது முகத் தசைகளின் மென்மையை போக்கி விடும். அதுபோல், பரு இருப்பவர்கள், பேஷியல் செய்வதை தவிர்ப்பது நல்லது.

முகம் பளிச்சிட கடலை மாவு மசாஜ்

முகம் பளிச்சிட கடலை மாவு மசாஜ்

எலுமிச்சை, மஞ்சள், கடலை பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி முகத்தை அழகு பெற செய்யலாம். கடலை மாவு, மஞ்சள் தூள்  இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை  எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவுமுகம்.

சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.
அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில்  சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும். அதே போல  குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை  மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும்.

10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.
முகத்தில் பருக்கள் அதிகளவு காணப்பட்டால் அவற்றை நீக்க, ஒரு ஸ்பூன் கடலை பருப்புடன் ஒரு மிளகை போட்டு, சிறிதளவு பால் ஊற்றி ஊற  வைக்க வேண்டும். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரை சேர்த்து கலக்கி, முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் நீரில் கழுவினால்  பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகத்தை பொலிவாக்கும்.  கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.


சிலருக்கு முகம் எப்போதும் டல்லா வாடியபடி இருக்கும். அந்த முகம் பொலிவாக இருக்கவும் கடலை மாவு சிகிச்சை அளிக்கலாம். தோலுடன்  இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள  வேண்டும்.

கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில்  முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும். சோர்வு தெரியாது. வாரம் ஒரு முறை செய்தால் பள,பளவென முகம் பிரகாசமாக இருக்கும்.
வெயிலில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல  பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

பெண்கள் சிலருக்கு முகத்தில் கருப்பு புள்ளிகள், திட்டுக்கள் தோன்றும். கண்ணுக்கு கீழ் அடர்த்தியான கரு வளையங்களும் விழும். இதை நீக்க  பாசிப்பருப்பு மாவு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காய வைத்து பவுடராக்கி, பாலுடன் சேர்த்து குழைத்து  முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும்.

உதடு சிவப்பழகு பெற!.

உதடு சிவப்பழகு பெற!.

பெண்களில் அழகை எடுத்துக்காட்டுவதில் கண்களுக்கு அடுத்தபடியாக இருப்பது உதடு. இத்தகைய உதடு கருத்து பொலிவிழந்து காணப்பட்டால் முகத்தின் வசிகரம் கெட்டு விடும். சில பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் உதட்டை கடித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படி செய்வதால் முதட்டின் மென்மை போய் விடும். மேலும் சில இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான்.

* இந்த உஷ்ணத்தை போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும்.

* இரவில் படுக்க போகும் போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு மீண்டும் பழைய பொலிவுக்கு வந்து விடும்.

* வாரம் ஒரு நாள் உதட்டிற்கு வெண்ணை போட்டு மசாஜ் செய்து வந்தால் உதடு மென்மையாகி பார்கக கவர்ச்சியாக தெரிய ஆரம்பிக்கும்.

* உதடு சிவப்பாக மாற வேண்டும் இன்றைய இளம் பெண்கள் பல விதமான கிரீம்களை போட்டு உதட்டில் அழகை கெடுத்து விடுகின்றனர். உதடு சிவப்பழகு பெற இயற்கையாக வைத்தியமான கொத்தமல்லியை அரைத்து அந்த சாறை உதட்டில் தொடர்ந்து பூசி வந்தால் படிப்படியாக உதடு சிவப்பழகாவதை பார்க்கலாம்.!..

அக்குள் கருமையாக இருக்கிறதா? இதோ 8 சூப்பர் டிப்ஸ்!

அக்குள் கருமையாக இருக்கிறதா? இதோ 8 சூப்பர் டிப்ஸ்!

தற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை.

இவ்வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக்கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது.

அந்தவகையில், அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.

05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.


08. உருளைக்கிழங்கு

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.

கழுத்தில் உள்ள கருமையை ஒரே நாளில் போக்கவேண்டுமா ? அதற்கான அற்புத வழிமுறை இதுதான்!

கழுத்தில் உள்ள கருமையை ஒரே நாளில் போக்கவேண்டுமா ? அதற்கான அற்புத வழிமுறை இதுதான்!

காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் விரைவில் போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை என்னவென்று பார்க்கலாம்.
கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை
முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது. குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான். காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க சில எளிய வழிகள் உண்டு.
அவை என்னென்ன?

எலுமிச்சைச் சாறு ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, சருமப்பராமரிப்பில் எலுமிச்சையின் பயன்பாடு மிக அதிகம். கழுத்தின் கருமையைப் போக்குவதிலும் எலுமிச்சைச்சாறு அதிவேகமாகச் செயல்படுகிறது.


எலுமிச்சை சாறுடன் சமஅளவு ரோஸ்வாட்டரை எடுத்துக் கொண்டு கலந்து, இந்த கலவையைக் பின்பக்க கழுத்தில் அப்ளை செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, இந்த சீரமை அப்ளை செய்துவிட்டுப் படுத்து, அடுத்த நாள் காலையில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரையிலும் இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தக்காளி ஜூஸைக் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, கழுத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரையிலும் காய விடவேண்டும். அதன்பின், நன்கு தேய்த்துக் கழுவவும். இது சருமத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படும். சருமத்திலுள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கும். கழுத்திலுள்ள கருமை மாயமாய் மறைந்து போகும்

ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது

பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.


பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.



புரோஸ்டேட் விரிவு,சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்க கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.பூசணிக்காய் விதை டீ இது மிகவும் எளிதான ஒன்று தயாரிப்பதற்கும்,உபயோகப்படுத்துவதற்கும்.இதற்குத் தேவையான பொருட்களை பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:ஒரு கப் தண்ணீர்.

ஒரு கையளவு பூசணி விதை.

நன்மைகள் :பூசணி விதை ஒரு சிறந்த சிறுநீர் பிரிப்பு(அதிகமான சிறுநீரை வெளியேற்றும்)ஆகும்.இவ்வாறு சிறுநீரை வெளியேற்றுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

நன்மைகள் :
வீக்கத்தை குணமாக்கக் கூடிய அலர்ஜி நீக்கியாகவும் செயல்படுகிறது.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை :இந்த டீயைத் தயாரிக்க செய்ய வேண்டியது பூசணி விதையை பொடியாக்கி ஒரு பானை நீரில் கலக்க வேண்டும்.இந்தக் கலவையை 15 நிமிடங்கள்கொதிக்க விட வேண்டும்.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை :பின்பு அதை வடிகட்டி விட வேண்டும்.இப்போது பூசணி விதை டீ ரெடி.இதை நீங்கள் பருகலாம்.இவ்வாறு செய்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்னையும் வராது.

கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
கருப்பைப் புற்றுநோயின் அறிகுறிகள்?

உறவின் போதும் அதற்கு பின்பும் ரத்தம் வெளிப்படும்.

வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும்.

வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தமும் கலந்து வெளிவரலாம்.

இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கருப்பைப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு நேரத்தில் அதிக வலி, மாதவிலக்கு நின்ற பின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.
கருப்பைப் புற்றுநோய் யாருக்கு ஏற்படும்?

பரம்பரை கருப்பை புற்றுநோய், ஹார்மோன் மாற்றம், சர்க்கரை அளவு அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்படும்.
கருப்பைப் புற்றுநோயிக்கு சிகிச்சை உள்ளதா?

HBV வைரஸ் மூலம் ஏற்படும் கருப்பைப் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். பயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது.
கருப்பை புற்றுநோயை தடுக்க பின்பற்ற வேண்டியவை?

உடல்எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து, தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க, சாதத்தின் அளவைக் குறைத்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

புரதம் நிறைந்த உணவை தவிர்த்து, முட்டைக் கோஸ், காலிஃபிளவர், முளை கட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்?

கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க, அசோகமரத்தின் பட்டையை பொடி செய்து, பாலில் கலந்து குடிக்கலாம்.

அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து, தினமும் காலை, மாலை 3 சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

ஆலமரப் பட்டையை பொடி செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.



அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

தினமும் காலையில் கரிசலாங்கண்ணி கீரையின் சாற்றை 30 மில்லி சாப்பிட்டு வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் குணமாகும்.



மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை? பின்பற்ற வேண்டியவை..

நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் டாக்டர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி- நிர்ணயிக்கும் நேரத்தில்- சரியான அளவில்- டாக்டர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் ஆபத்தாகிவிடும்.

பொதுவாக வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், தூக்கமின்மை போன்றவைகளுக்கு டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகடைகளில் மருந்துகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். அத்தகைய மருந்துகளால் அவர்களுக்கு நோய் குறைந்ததுபோல் தோன்றினாலும், அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடல் மெல்ல மெல்ல ஆரோக்கிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும்.



டாக்டரின் பரிந்துரை இல்லாத மருந்துகளை சுயமாக வாங்கி தொடர்ந்து உட்கொண்டால், உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். டாக்டர்கள் நோயின் தன்மை, உடல்நிலை, வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்ற பலவற்றையும் ஆராய்ந்து சரியான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அதுவே முழு பலனைத்தரும்.

உலக நாடுகள் சிலவற்றில் டாக்டரின் பரிந்துரையின்றி சிலவகை மருந்துகளை மட்டும் சுயமாகவே மெடிக்கல் ஷாப் நடத்துபவர்கள் விற்பனை செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது. நம் நாட்டில் ஏராளமான வகை மருந்துகளை அவ்வாறு வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதில் அரசு கவனம் செலுத்தி, என்னென்ன வகை எமர்ஜென்சி மருந்துகளை டாக்டர் பரிந்துரையின்றி பெறலாம் என்று வழி காட்டவேண்டும். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நோயாளி மட்டுமே பொறுப்பாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


விடவேண்டாம். முதல் நாள் ஓய்வெடுங்கள். மறுநாளும் காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தியுங்கள். உங்கள் மெடிக்கல் ஹிஸ்டரி தெரிந்த ‘பேம்லி டாக்டரிடம்’ சிகிச்சை பெறுவது நல்லது. மருந்து சாப்பிட்ட உடன் நோய் குணமாகவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

உடனே நோய் குணமாகாத போது, கொடுக்கும் மருந்தின் அளவை கூட்டலாமா என்றும் சிலர் யோசிக்கிறார்கள். டாக்டர் குறிப்பிடும் அளவைவிட அதிகமாக மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகாது என்பதை விட, பக்கவிளைவுகளை தோற்றுவிக்கும். பாதுகாப்பான மருந்தாக கருதப்படும் பாராசிட்டமாலை கூட அதிகமாக உட்கொண்டுவிட்டால் சிலநேரங்களில், சிலருக்கு பாதிப்புகள் உருவாகும்.

சிலர் டாக்டரிடம் செல்வார்கள். டாக்டர் அவரது நோய்த்தன்மைக்கு ஏற்ப ஒருவாரத்திற்கு மருந்துகள் எழுதிக்கொடுத்து, ‘சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’ என்பார். அவரோ அதே மருந்தை தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு டாக்டரிடம் வருவார். இது ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கும் செயல்முறையாகும்.

 டாக்டர் குறிப்பிடும் காலம்வரை மட்டுமே குறிப்பிட்ட மருந்தை சாப்பிட்டுவிட்டு மீண்டும் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதே சரியான வழிமுறையாகும். சிலர் முதலில் இரண்டு நாட்கள் ஒரு டாக்டரிடம் காட்டி, அவர் வழங்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். மூன்றாம் நாள் இன்னொரு டாக்டரிடம் செல்வார்கள்.

முதலில் வாங்கிய மருந்து சீட்டை காட்டாமலே ஆலோசனை பெற்று, அவர் வழங்கும் மருந்துகளையும் சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்ற, சரியான அணுகு சிகிச்சை பெறவேண்டும். நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, நோயாளிகளுக்கு உணவு சாப்பிட மனம் இருக்காது. ஆனால் அவர்களுக்கு கட்டாயம் உணவு தேவை.

அதில் அன்றாடம் உடலுக்கு தேவையான கலோரியும்,சத்தும் இருக்கவேண்டும். சாப்பிடாவிட்டால், உடல் மேலும் தளர்ந்து போகும். காய்ச்சல் இருக்கும்போது எளிதாக ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ளவேண்டும். குளிர்ந்த, பழகிய உணவுகளை தவிர்க்கவேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு சேர்த்த கஞ்சி, ஓ.ஆர்.எஸ்.திரவம் போன்றவைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

 டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை கடையில் வாங்கும்போது சீட்டை வைத்து மருந்துகளை சரிபாருங்கள். மருந்தின் காலாவதி மாதத்தை கவனியுங்கள். ஒருமுறை வாங்கி பயன்படுத்திய பாட்டில் மருந்துகளை, சிலர் ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் நோய் வரும்போதும் கொடுக்கிறார்கள்.

அது தவறு. ‘சிரப்’ வடிவில் உள்ள ஆன்டிபயாடிக் மருந்து பாட்டில்களை திறந்த சில நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதன் பின்பு அதன் சக்தி குறைந்துவிடும். அதனால் திறந்த பாட்டில் மருந்துகளை நோய் தீர்ந்த பின்பு சேமித்து வைக்கவேண்டாம். பாரசிட்டமால், இருமல் சிரப் போன்றவைகளை காலாவதி தேதிவரை பயன்படுத்தலாம்.

சில மாணவர்கள் அன்றாடம் பாடங்களை படிக்காமல், பாடங்களை சேர்த்துவைத்துக்கொண்டு பரீட்சை காலத்தில் அதிக சிரத்தை எடுத்து படிக்கிறார்கள். அப்போது தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தூக்கத்தை கலைக்கும் ‘ஆம்பிட்டமின்’ வகை மாத்திரைகளை, மருந்துகடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இது அவர்கள் உடலுக்கு அவர்களே செய்துகொள்ளும் தீங்காகும். ஒருசில விளையாட்டு வீரர்கள் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை ‘ஊக்கமருந்தாக’ பயன்படுத்துகிறார்கள். அது சட்ட விரோதமானது. உடலுக்கும் ஆபத்து. நீங்கள் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சைக்காக செல்லும் டாக்டர் முறையாக கற்றவரா? போலி டாக்டரா என்பதை கண்டறியும் பொறுப்பு உங்களை சார்ந்ததுதான்.

போலி டாக்டர்கள் தங்களுக்கு தெரிந்த விதத்தில், கேள்வி ஞானம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை அளிப்பார்கள். அதனால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படும். முறையாக கற்ற டாக்டர்கள் வழங்கும் மருந்துகளும் ஒருசில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஆலோசனை பெறவேண்டும். வெளிநாடுகளில் டாக்டர்கள் மருந்துகளை எழுதும் போது கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. டாக்டர்கள் எழுதுவது புரியாத போது மருந்து மாறி விடக் கூடும். அதனால் வாங்கிய மருந்தை டாக்டரிடமோ, நர்சிடமோ காட்டிவிட்டு பயன்படுத்ததுவது நல்லது.

வீடுகளில் மருந்துகளை எப்போதுமே குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர் ஒருவருக்கும், குழந்தை ஒன்றுக்கும் காய்ச்சல் ஏற்பட்டால் பெரியவர் டாக்டரைப் பார்த்து வாங்கிய மாத்திரையில் அரை அல்லது கால் பகுதியை குழந்தைக்கு கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு.

மருத்துவ சாஸ்திரம் குழந்தைகளை ‘சில்ரன் ஆர் நாட் ஸ்மால் அடல்ட்ஸ்’ என்று குறிப்பிடுகிறது. ‘குழந்தைகள் வயதுக்கு வந்தவர்களின் சிறிய உருவம் அல்ல’ என்பது இதன் அர்த்தமாகும். சிறுவர்களின் ஈரல், கிட்னி போன்றவைகளின் செயல்பாடுகளிலும், இரைப்பையில் சுரக்கும் அமிலங்களிலும் வித்தியாசம் இருக்கிறது.

மாத்திரைகளை, அளவு குறைத்து ஒருபோதும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. கவனிக்காமல் இன்னொரு மருந்தை மாற்றி சாப்பிட்டுவிட்டால், உடனே கவனிக்கவேண்டும். மிகக் குறைந்த அளவே சாப்பிட்டிருந்தால் பெரிய பாதிப்பு எதுவும் நேராது. அளவு அதிகம் என்றால் தொந்தரவுதான்.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது வாந்தி வரச் செய்வதுதான் சிறந்த வழி. உப்பு கலக்கிய நீரை குடித்தோ, சிறிய துணியால் தொண்டையின் உள்பகுதியை தொட்டோ வாந்தி வரச்செய்யவேண்டும். வாந்தி வரச் செய்யும்போது அவர் முழு நினைவுடன் இருக்கவேண்டும். மண்ணெண்ணெய், ஆசிட் போன்றவைகளை குடித்தால் வாந்தி எடுக்கவைக்கக்கூடாது.

உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிடவேண்டும். இருமல் சிரப் மற்றும் காய்ச்சலுக்கான சில மருந்துகளை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி ஹிஸ்டமின் தூக்கத்தை வரவழைக்கும். சோர்வு, உற்சாகக்குறைவு போன்றவைகளும் தோன்றும். அதனால் அத்தகைய மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் நாளில் ஓய்வெடுப்பதே நல்லது.

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!

 தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!

 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பிடுவார். தனக்கு நீரிழிவு பிரச்னை இருப்பது அவருக்குத் தெரியும்... அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமானது. நண்பர் ஒருவர், நீரிழிவுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு போலி மருத்துவரின் முகவரியைச் சொல்ல, அங்கே சென்றார். அந்த மருத்துவர் சில இலைகளைக் கொடுத்தார். ‘இரவில் ஒரு தம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு வைத்து, காலையில் நீரைக் குடியுங்கள். நீரிழிவு ஓடிவிடும்’ என்றார். காமாட்சிநாதன் அதை நம்பினார்... தினமும் மூலிகைத் தண்ணீரைக் குடித்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. முக்கியமாக அவரால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விறைப்புத் தன்மையை அடைவதிலேயே பிரச்னை!

வேறு வழியில்லாமல் நீரிழிவு நிபுணரை அணுகினார். பரிசோதித்த டாக்டர், காமாட்சி நாதனின் உடலில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாகியிருக்கிறது என்பதைச் சொன்னார்... கடிந்து கொண்டார். ஆரம்ப  கட்டத்திலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், தாம்பத்தியத்தைப் பாதிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது என்பதை சுட்டிக் காட்டினார்.  நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண்கள் பாதிக்கப்படும்... சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகும்... இதய நோய்கள் ஏற்படும்... பாதங்களில் புண்கள் வரும். இவை அனைவரும் அறிந்தவை. சரி... நீரிழிவு, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? ஆம்... நிச்சயமாக... எப்படி? ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதையே ‘சர்க்கரை நோய்’ அல்லது ‘நீரிழிவு பிரச்னை’ என்கிறோம்.

நமது ரத்தக்குழாய்களில் மூன்று பகுதிகள் உள்ளன. உட்பகுதி ‘எண்டோதீலியம்’ என்று அழைக்கப்படும். இதனுள் பல ரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் Advanced glycation end products   எனும் பொருட்கள் உருவாகி ரத்தக்குழாயின் உட்சுவரை அடைத்துக் கொள்ளும். மற்ற உறுப்புகளுக்குப் போக வேண்டிய ரத்த ஓட்டம் இதனால் குறையும். நீரிழிவு பிரச்னையுடன் கொழுப்பும் அதிகமாகிவிட்டால் ரத்தக்குழாய்களின் சுவர்கள் மேலும் குறுகிவிடும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.  ஆணுறுப்பில் நிறைய காலி இடங்கள் உள்ளன.

செக்ஸ் உணர்வுக்கு உட்படும் போது உடலின் மற்ற இடங்களில் உள்ள பெருமளவு ரத்தம், காலியான இடங்களில் சேர்ந்து ஆணுறுப்பை பலூன் போல விரிவடைய செய்கிறது... விறைப்புத் தன்மையை ஏற்படுத்து கிறது. இப்படி ஆணுறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்தால், விறைப்புத்தன்மை அடைவதில் பிரச்னை ஏற்படும். சரியாக உறவில் ஈடுபட முடியாது. தாமதமாக விந்து வருவது, விந்து வராமல் போவது, மூத்திரப்பைக்குள் விந்து போய்விடுவது போன்ற பிரச்னைகளும் உண்டாகும். பெண்களுக்கு ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் யோனிமலரில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் செக்ஸில் முழுமையான சுகத்தை அடைய முடியாது. பெண் உறுப்பில் நீரும் சுரக்காது. ‘டயாபடிக் நியூரோபதி’ பிரச்னையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாகும்.

நீரிழிவு பிரச்னையால் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்னை அடைந்த ஆண்கள் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. நரம்புகளைத் தூண்டிவிடும், விறைப்புத் தன்மையை அடைய வைக்கும் மருந்துகளும் மாத்திரைகளும் இப்போது கிடைக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்ளவேண்டும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, அத்தியாவசியமான உடற்பயிற்சி களை மேற்கொள்வது, பொரித்த, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பது, வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், தாம்பத்தியத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. பிரச்னை உள்ளவர்கள் உடனே அணுக வேண்டியது சரியான நீரிழிவு நிபுணர் ஒருவரை!